Reading Time: < 1 minute

கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சந்தேக நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

34 வயதான பிலிப் கிராண்ட் என்ற நபரே இவ்வாறு இரண்டு பேரை படுகொலை செய்திருந்தார்.

இடாபிகாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதனால் இந்த இருவரும் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருந்தது.

குறித்த நபரை 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொலிஸார் அடையாளம் கண்டனர்.

பீல் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த கிராண்ட் என்ற நபர் அண்மைய நாட்களில் டொரன்டோ பெரும்பாக பகுதியில் உலகுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த நபரின் புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரை யாரேனும் கண்டால் போலீசாரைக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.