Reading Time: < 1 minute

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.