Reading Time: < 1 minute

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் சொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிறு அதிகாலை வேளையில் கிழக்கு அல்பர்ட்டா பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

அல்பர்ட்டா டவுன்சிப் வீதியில் ட்ரக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த ஐவரில் நிலைமை குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தில் 17 மற்றும் 19 வயதுகளை உடைய அல்பர்ட்டா கவுன்சூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் இந்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.