Reading Time: < 1 minute

கனடாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால், கனடாவுக்கு வீட்டு வாடகைகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதாக தேசிய வாடகை அறிக்கை தெரிவிக்கிறது.

கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை விதித்தது கனடா அரசு.

2023ஆம் ஆண்டு, 5,00,000க்கும் அதிகமான சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கியது. 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு 4,85,000 சர்வதேச மாணவர்களுக்கு கனடா கல்வி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டிலோ, அதாவது, 2025ஆம் ஆண்டிலோ, 4,37,000 பேருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிவாக்கிலிருந்து, முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில், குறைந்தபட்சம் 16 மாதங்களாவது படிக்கும் வகையிலான கல்வித்திட்டங்களில் சேருவோரின் துணைவர்களுக்கு மட்டுமே கனடாவில் பணி அனுமதி வழங்கப்பட உள்ளது.

இப்படி தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே வருவதால், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது.

கனடா, பிரித்தானியா முதலான பல நாடுகள், உள்நாட்டு மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களிடம் பல மடங்கு அதிக கட்டணம் வாங்குகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.