Reading Time: < 1 minute

கனடாவில் ரொறன்ரோவில் இணையத்தின் ஊடாக நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலான காணொளி ஒன்றை குறித்த பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 46 வயதான அமெக்கா சொன்பெர்கர் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.