Reading Time: < 1 minute

பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்த கனேடியர் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவரும் Khaled Omeed (30) இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

அவரது குடும்பம் Hounslowவில் தங்கியிருந்த நிலையில், 12ஆம் திகதி அவரும் அவரது குடும்பத்தினரும் Baker Street ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, மாலை 6.00 மணியளவில் காணாமல் போனார் Khaled.

Khaled கற்றல் குறைபாடு கொண்டவர் என்றும், பேசும் திறன் அற்றவர் என்றும் கூறப்படும் நிலையில், அவருக்கு லண்டன் புதிய இடம் என்பதாலும் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆகவே, Khaledஐ யாராவது கண்டால் உடனடியாக தங்களுக்கு தகவலளிக்குமாறு லண்டன் பொலிசார் பொதுமக்களுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.