Reading Time: < 1 minute
உக்ரைன் மீது போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிகிறது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 12 நாட்கள் போர் நீடித்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை ரஷ்யா அழிக்க முயற்சிப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து 17 நாடுகளை உடனடியாக நீக்க ரஷ்யா உத்தரவிட்டது.
இந்த பட்டியலில் இருந்து உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.