Reading Time: < 1 minute

கனடாவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றாறியோவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 வயதுடைய சிறுமி உள்ளிட்ட மூன்று இளையவர்களை வோட்டர்லூ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று சிறுவர்களும் அதிகாலை 2.30 மணி அளவில் குறித்த ஆணின் காரில் ஏறி சண்டையிட்டதாகவும் இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமியொருவரும் 14 வயது சிறுமி ஒருவரும் 17 வயது சிறுவன் ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாகவும் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவர்கள் கொள்ளை மற்றும் ஆயுத குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.