Reading Time: < 1 minute

கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 21 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்தார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டிருந்தபோது குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

21 வயதான டிபோர் ஓர்கொனா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.