Reading Time: < 1 minute

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கரடியின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்துள்ளார்.

அல்பர்ட் கல்கரி ராக்கி வியூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியின் தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸாரும் அல்பர்ட்டா வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.