Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவில் டவுன்டவுன் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.