Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவனை அவரது தாயை தேடி வருகிறார்.

ஹீத்தர் மெக்காத்தர் என்ற பெண் தனது நான்கு வயது மகனை காணவில்லை என தெரிவிக்கின்றார்.

தங்களது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிள்ளை கடத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஜாக்கப் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போய் உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தனது பிள்ளையை தேடி அலைவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் ஓவியங்கள் சுவரை அலங்கரித்து வருவதாகவும் அவரது பொம்மைகள் நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் மிகவும் அன்பானவர் எனவும் மிகவும் சிறந்த பண்புகளை கொண்டவர் எனவும் அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

இந்த சிறுவனை அவரது தந்தை வியட்நாமுக்கு கடத்திச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிய வேண்டியவர்கள் அங்கேயே தங்கி விட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

வியட்நாமுக்கு சென்றதன் பின்னர் ஒன்றிரண்டு தடவைகள் தொடர்பு கொண்ட போதும் பின்னர் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டதாவும் மகனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அந்த பெண் தெரிவிக்கின்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.