Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் சில பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மற்ற பாடசாலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு திறக்கப்படுகின்றன.

இது 8ஆவது அல்லது 10ஆவது ஆகவும், ஒரு வாரத்துக்கு பிறகு மற்றொரு குழுவாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

வின்ட்சர், யோர்க், ரொறொன்ரோ, பீல் மற்றும் ஹாமில்டன் ஆகிய பாடசாலைகள் பெப்ரவரி 10ஆம் திகதி வரை மூடப்படும் என்று மாகாணம் முன்பு கூறியிருந்தது.